Monday, July 27, 2009

எம்.ஏ. சுசீலா விருதுப்பகிர்வு






















விருதுகளும் , பரிசுகளும் நம்மை மேன்மேலும் ஊக்கப்படுத்துவதற்காக வழங்கப்படுகின்றனவேயன்றி அவை நம் செயல்பாட்டின் முடிந்த முடிவுகளல்ல.
முனைவர் திரு குணசீலன் அவர்கள் எனக்கு அளித்த பட்டாம்பூச்சி விருதை - அவர் என் மீதும் என் எழுத்தின் மீதும் கொண்ட மதிப்பினால் மட்டுமே அளித்திருப்பதாக எண்ணி அதை ஏற்றுக் கொண்டபடி , தொடர்ந்த வலைப் பங்களிப்பில் முயன்று வருகிறேன்.

விருதை அளித்தபோது அவர் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க , சிறந்த வலைப் பதிவர்களாக நான் கருதும் ஐவருடன் அவ் விருதைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.

அந்த ஐவர்......

1.திரு பென்னீஸ்வரன்:


ராகவன் தம்பி என்ற புனைபெயரில் பல நல்ல படைப்புக்களையும் , அங்கதம் கலந்த பல சமூக, இலக்கிய விமரிசனங்களையும் எழுதி வருபவர் , புது தில்லியிலிருந்து வெளிவரும் 'வடக்கு வாசல்' மாத இதழின் ஆசிரியராகிய மதிப்பிற்குரிய திரு'யதார்த்தா' பென்னீஸ்வரன் அவர்கள். நவீனத் தமிழிலக்கிய முயற்சிகளுக்கும், நவீன நாடக நிகழ்கலை ஆக்கங்களுக்கும் இந்தியத் தலைநகரில் அடித்தளம் அமைத்தவர்களில் இவரும் ஒருவர்.

வலை எழுத்தில் என்னிலும் மூத்தவர்;அத் துறையில் கரை கண்டவர்;தொடக்கத்தில்'சனிமூலை'என்ற தலைப்பில் வலைப்பூ எழுதி வந்த அவர், தற்பொழுது தான் நடத்தி வரும் 'வடக்கு வாசல்' இதழுக்கான இணையத்திலேயே 'ராகவன் தம்பி பக்கங்கள்' என்ற தலைப்பில் தன் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்.

மதுரை மண்ணிலிருந்து மூன்றாண்டுகளுக்கு முன் தில்லி வந்து தமிழ்த் தாகத்தால் தவித்துக் கொண்டிருந்த எனக்குத் தமிழிலக்கிய ஆக்கங்களைப் பதிவு செய்யத் தன் 'வடக்கு வாச'லை விரியத் திறந்து வரவேற்ற நல்லுள்ளத்திற்குச் சொந்தக்காரர்.
அவர் கொண்டுள்ள தணியாத தமிழார்வத்திற்காகவும், அவரது தொடர்ந்த இணையச் செயல்பாட்டை மதித்துப் போற்றும் வகையிலும்...
விருதுகளையெல்லாம் கடந்து விட்டவர் அவர் என்றபோதும் என் எளிய சமர்ப்பணமாக....
பட்டாம்பூச்சிவிருதை அவருடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வடைகிறேன்.

2.திருமதி திலகபாமா:


கவிஞரும் , விரசம் தவிர்த்த - ஆக்கபூர்வமான பெண்ணியப் படைப்பாளியுமான திருமதி திலகபாமா அவர்கள்,
கணவரின் மருத்துவப் பணிக்குக் கைகொடுக்கும் அதே வேளையில் தன் கவிதை மற்றும் எழுத்தார்வங்களையும் குன்ற விடாமல்,தன்னைத் தானே செதுக்கிச் சீரமைத்தபடி பல கவிதை நூல்களையும் , விமரிசன மற்றும் பயண எழுத்துக்களையும் உருவாக்கி வருபவர்; பல நாடுகளுக்கும் பயணம் செய்து பல மாநாடுகளில் பங்கேற்ற செழுமையான அனுபவம் கொண்ட திலகபாமா , நான் பணிபுரிந்த பாத்திமாக் கல்லூரியின் முன்னாள் வணிகத் துறை மாணவி என்பது எனக்கு மேலும் பெருமை சேர்க்கக் கூடியது.
'சூரியாள்', 'ஒளிக் கவிதை' ஆகிய இரு வலைப்பூக்களின் வழி இணையத் தமிழுக்கு வளம் சேர்த்து வரும் என் அன்பு மாணவிக்கு மன மகிழ்வுடன்
பட்டாம்பூச்சி விருதை அளித்துச் சிறப்பிக்கிறேன்.

3.கபீரன்பன்:

இணையத்தின் வழி எனக்கு அறிமுகமானவர்.இலக்கியம், ஆன்மீகம்,மருத்துவம்,இணையத் தொழில் நுட்பம் எனப் பல வகை ஈடுபாடு கொண்டிருக்கும் இவர் மைசூருவைச் சேர்ந்த ஒரு பொறியாளர்.

'தேடிவரும் தேன் சிட்டு' என்ற பெயரில் alt-webring.com , தான் வடிவமைத்திருக்கும் வலை சுற்றியில் என் வலைப்பூவைச் சேர்த்துக் கொண்டு பலரும் அதைப் பார்வையிடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுமாறு எனக்கு ஆலோசனை வழங்கியவர்.அவர் உருவாக்கியுள்ள அந்த வலைசுற்றி பற்றி அவரது சொற்களிலேயே சொல்வதானால்....
''தேன் சிட்டு- ஒரு வலை சுற்றி
தேன்சிட்டு நில்லாமல் பறப்பது. அடுத்து எந்த பூவிற்கு செல்லும் என்று திட்ட வட்டமாக சொல்ல முடியாது. Random movement. அதுவே அதன் அழகும் கூட.
இணையத்தில் வலைச் சங்கிலிகள் (web ring) உண்டு. அதனைத் தொடர்ந்து சென்றால் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த வலைப்பக்கங்களை அடுத்தடுத்து காணலாம். அது வருகையாளர்களை வலைப் பக்கம் அதிகமாக்கப் பயன் படும். ஓவியம், இசை,ஆன்மீகம் போன்ற பலபிரிவுகளில் இது அதிகம் காணப்படுகிறது.
இந்த தேன் சிட்டைத் தொடர்வதன் மூலம் வாசகரும் பல வலைப்பூக்களை சுற்றி வரலாம் !''

('தேடிவரும் தேன் சிட்டு'வலை சுற்றிக்கான வார்ப்புருவை என் வலையின் பக்க இணைப்பில் பார்க்கலாம்.)

தற்போது உலகநீதி மற்றும் முதுமொழிக் காஞ்சி இரண்டையும் பலரும் அறிந்து கொள்ளும் வகையில் Google Gadget வடிவில் இவர் தயாரித்து வருகிறார்.

தன் இணைய ஞானத்தைத் தமிழிலக்கிய வளர்ச்சிக்காகப் பயன்படுத்திச் சக பதிவர்களையும் ஊக்குவித்துவரும் திரு கபீரன்பன் 'கபீரின் கனிமொழிகள்' ,'சித்திரமும் கைப் பழக்கம்','கற்கை நன்றே' என்று மூன்று வலைப்பூக்களை ஒரே நேரத்தில் எழுதிவருபவர்.
அயராத ஊக்கத்துடன் நாளும் நாளும் செயல்பட்டுவரும் திரு கபீரன்பன் அவர்கள் முன்பே ஒரு முறை வலைப் பதிவர்களுக்கான பட்டாம்பூச்சி விருதைப் பெற்றிருந்தபோதும் ,மூன்று வலைப்பூ எழுத்துக்களிலும் தமிழிலக்கிய விட்ஜெட்டுக்களை வடிவமைக்கும் அரிய தொழில் நுட்பத்திலும் முனைந்திருக்கும் அவருக்கு மற்றுமொரு முறை அந்த விருதை வழங்குவதில் தவறில்லை ,அது அவருக்கும் விருதுக்கும் மேலும் பெருமை சேர்ப்பது எனக் கருதிப்
பட்டாம்பூச்சிவிருதைத் திரு கபீரன்பனுக்கு வழங்கிப் பாராட்டுகிறேன்.
எழுதி வருபவர்.

4.கமலாதேவி அரவிந்தன்:



சிங்கப்பூரைச் சேர்ந்த திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்கள் , எனக்கு வலைப் பரிமாற்றங்கள் வழி அறிமுகமானவர். பழகிய சில நாட்களிலேயே தனது அளவு கடந்த அன்பையும், பாசத்தையும் தனது மின் அஞ்சல்கள் வழியே எனக்கு அளித்து வரும் இவர் 'கமலகானம்' என்ற பெயரில் வலைப்பூ எழுதி வருபவர்.
சிங்கைத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் தனி முத்திரை பதித்து வரும் 'மலையாளச் சேச்சி' இவர்.
தாய்மொழியை மலையாளமாகக் கொண்டிருந்தபோதும் , தமிழ் மீதும் தணியாத ஆர்வம் கொண்டு , இரு மொழிகளிலும் சிறுகதை,நாவல் படைப்புக்கள்,மொழியாக்கங்கள்,ஆய்வுக் கட்டுரைகள்,நாடக நிகழ்கலைஆக்கங்கள் எனப் பல துறைகளிலும் முனைப்போடு தீவிரமாக இயங்கி வருபவர்.
தான் ஈடுபட்டுள்ள துறைகளில் குறிப்பிடத்தக்க பல விருதுகளையும், பரிசுகளையும் ,பாராட்டுக்களையும் பெற்றுள்ள -இன்னும் நேரில் காணாத -இந்த அன்புத் தோழிக்கு என் சார்பில் -அவரது சிறந்த இணையப் பங்களிப்புக்காகப்
பட்டாம்பூச்சி விருதை அளிப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.


5.திருமதி கோமதி நடராஜன்:

வலை வழி இவர் எனக்கு அறிமுகமானபோதும் , எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவி .தன் இளமையில் எழுதாமல் விட்டதையெல்லாம் சேர்த்து இப்பொழுது எழுதி,'வள்ளுவம்' என்ற தன் வலையில் பதிவு செய்து வருபவர்.
கல்லூரி நாட்களில்தன்னுள் உறங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தாயைத் துயில் கலைத்து (இவை அவரின் சொந்த வார்த்தைகள்) வெள்ளமெனப் பொங்கி வரும் தன் கற்பனைக்கும், எழுத்துக்கும் வலையை வடிகாலாக்கிக் கொண்டிருப்பவர்.
மூத்த குடிமக்களுள் ஒருவரான இவரது தமிழ்ப் பற்றையும், படைப்பார்வத்தையும் பாராட்டும் வகையில்
'பட்டாம்பூச்சி' விருதை இவருக்கு அளித்துப் பாராட்டுகிறேன்.

பி.கு. :
வலை வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
விருது பெற்ற ஐவர் குறித்த அறிமுகத்தோடு நின்றுவிடாமல் அவர்களது வலைத் தளங்களுக்கு வருகை புரிந்து கருத்துரை இடுவதே அவர்களை மகிழ்வடையச் செய்யும்..

--
7/24/2009 12:49:00 AM அன்று எம்.ஏ. சுசீலா இல் எம்.ஏ.சுசீலா ஆல் இடுகையிடப்பட்டது

Friday, July 24, 2009

கூத்துப்பட்டறையில் - கருத்துக்கள்

அருமை கமலம். உங்களோடு நாங்களும் பயணித்தை அனுபவத்தைத் தந்துவிட்டீர்கள். பசுபதியைப் பற்றி முதலில் ஆரம்பிக்கும்போதே அந்தப் பசுபதிதான் இந்தப் பசுபதி என்று ஊகித்தேன். ஆனால் உங்கள்ள் எழுத்து மூலம் வரட்டும் என்று காத்திருந்தேன்.

அவ்வப்போது இத்தகைய நல்ல தொடர்களை எங்களுக்கும் தாருங்கள்.. அது பாட்டுக்கு அது.. இது பாட்டுக்கு இது..

திவாகர்




கமலம் ,

நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் ,திரைப்படம் போல் சித்தரிக்கும் தங்கள் ஆற்றல் என்னை பிரமிக்கவைக்கிறது .
எதையும் காட்ச்சியாகவே பார்த்து அவை பதிவு செய்து கொள்ளும் ஒரு அரிய முறை உங்களுக்கு கை வந்திருக்கிறது .
ஒருவித்தியாசமான அறிமுகம் .கூத்துப்பட்டறைக்கு தந்திருக்கிறீர்கள்
உடன் வாழ்ந்த நண்பர்களையும் என்றும் அழியாத பாத்திரங்களாக்கி விட்டீர்கள் .

முனைவர் கண்ணன் சொல்வது போல் உங்கள் நடை கொஞ்சும் சலங்கைதான் .
ஒரு சாஹித்யக்காரியின் படைப்பு இத்தனை விரைவில் முடிந்து விட்டது வருத்தமே வாழ்க !

அன்புடன்
ஏ சுகுமாரன்






சுகுமாரன்
அன்பான நிங்ஙளின் கருத்தாழத்துக்கு .நன்றி. பல ஆண்டுகளாகியும் எப்படி நினைவில் வைத்கூத்துப்பட்டறையில்திருக்க முடிகிறது , என்ற பலரின் கேள்விகட்கு எண்டெ பதில்,ஞான் எதையுமே மறக்கவே இல்லை. மறந்தால் தானே புதிதாக நினைப்பதற்கு.கூத்துப்பட்டறை மாணவர்களை எண்டெ சொந்த தம்பிகளாகவே நினைக்கிறேன் அதனால்தான் மொச்சைப்பற்கள் தெரிய , சேச்சி, என்றழைத்த பசுபதியின்
பேட்டியை , அண்மையில், மலையாள சேனல் ஏஷியா நெட்டில் , பார்த்தபோது, எனக்கு பிரமிப்பே இல்லை. என்ன? அன்றைய ஒல்லிக்குச்சி பசுபதி அல்ல.இன்று.
இக்கட்டுரை மலையாளத்திலும் வெளிவந்து சென்ற வாரம் தான் முற்றுப் பெற்றது.
அவர்களும் கூத்துப்பட்டறை மபற்றி, விசாரித்துள்லார்கள்.

அன்புக்கு நன்றி
கமலம்





அதுதானே.

எனக்கு மின்தமிழை அறிமுகப்படுத்தியவர்களில் நரசய்யா சாருக்கு அடுத்து வருபவர் கமலம் தம்புராட்டி. இந்தக் குழுமத்தில் ஒரு தனிஒளி கமலம் அவர்கள்.

அத்தனை வலு இல்லை என்றாலும் நானும் அவரைப் போக விடாமல் இழுத்து வைத்துக் கொள்ள முயற்சி்ப்பேன்.

கூத்துப்பட்டறைக்கு அடுத்து இன்னும் பல அற்புதமான அனுபவங்கள் உங்கள் கொஞ்சும் தமிழில் தொடரட்டும்.

என்ன, கொஞ்ச நாட்கள் கழித்து நாங்களும் பழக்க தோஷத்தில மலையாளம் கலந்து எழுதத் துவங்கி விடுவோம்.
அன்புடன்

பென்னேஸ்வரன்







அப்படிக் கொப்பரைத்தொட்டியை விளித்ததால்தானே ,
காசுமியின் அருமையான கவிதை இன்று கிட்டியுள்ளது.
தாயுமானவன், ரிஷான், சுகுமாரன், துரை, எனப் பலரின் கவிதைகளும் கூட
மனசுக்கு உவப்பூட்டுகிறது தான்.எல்லோருக்குமே வாழ்த்துகிறேன்.
பாடல் கேட்டேன். நன்றி.
கமலம்.
பி.கு-- போனாலும் அவ்வப்போது பூச்செண்டு கொடுக்க நிச்சயம் வருவேன்

.



அதெல்லாம் விடமுடியாது. நீங்கள் நினைத்தால் யார் யாரையோ கொப்பரைத்
தொட்டியில் போடுகிறீர்கள்! பிறகு இனிமேல் வரமுடியாது என்கிறீர்கள். என்ன
நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதெல்லாம் எங்கும் போகக்கூடாது.
மின்தமிழின் தம்பிராட்டி போல், வழக்கம் போல் வளைய, வளைய வந்து
கொண்டிருங்கள். கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு, நெஞ்சில் பொங்குதம்மா புதிய
பாட்டு!

க..

Wednesday, July 22, 2009

கூத்துப்பட்டறையுன் கருத்துக்கள்

கமலம்,

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்திருக்கிறேன்.

உங்கள் கூத்துப் பட்டறைத் தொடரை விட்டுவிட்டுத்தான் படித்தேன்.
பல்வேறு (சில்லறை) வேலைகள், பயணங்கள் இவற்றால் தவறவிட்டது
உண்டு.

மிகவும் சுவையான தொடர். இதில் முக்கியம் என்னவென்றால்
objectiveஆக எழுத வேண்டும் என்ற தொந்திரவு இல்லாமல்
subjectiveஆக உங்கள் அபிப்பிராயங்கள், உணர்வுகள் அனைத்தையும்
குழைத்து எழுதினீர்கள். தற்சார்பற்ற எழுத்து காய்ந்து கருவாடாகிப்
போகும் ஆபத்து உண்டு. உங்களை உள்ளே கரைத்துக் கொண்டு
எழுதும் எழுத்தே உயிர்ப்புடன் நிற்கும். உங்கள் எழுத்து அப்படிப்
பட்டது. அதனால்தான் சுவை. அதனால்தான் ஈர்ப்பு. எத்தனை பேரை
ஈர்த்துக் கட்டப் போட்டிருக்கிறீர்கள் பாருங்கள்!

நம் வாழ்வில் முக்கிய கணங்களை எல்லாம் இப்ப்டி எழுதி வைத்து
நம் சகோதரர்களுக்கு மட்டுமின்றி நம் பிற்காலச் சந்திதியனருக்குக் கூட
விட்டுச் செல்வது நல்ல காரியம்.
அப்படியான அன்பு வலை விரிப்புத்தான் உங்களுடையதும். படிக்கப் படிக்க
எல்லாருக்கும் அணுக்கமான சேச்சி ஆகிவிடுகிறீர்கள். (படிப்பவர்களில்
பாதிப்
பேர் உங்களுக்குச் சேட்டனாகும் வயதுடையவர்கள் என்பதைச் சொல்லி
கெடுக்க வேண்டாம் என நினைக்கிறேன்.) முத்துசாமியையும் பசுபதியையும்
இன்னும் பலரையும் எங்களுக்குப் பக்கத்தில் கொண்டுவந்து விடுகிறீர்கள்.

பலாப் பாயசம் போன்ற அருமையான தொடரை வழங்கியமைக்கு நன்றி.

ரெ.கா.



பதில் :-
சுழல் பந்து சார்,
நிங்ஙளின் feedback கோணோமே என்று மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.
தமிழில் சுழல் பந்து சிறுகதைதானே எண்டெ முதல் இலக்கிய வாசல், [எண்டெ அனைத்துப்பேட்டிகளிலும் கூட
இதை சொல்லியிருக்கிறேன்]
பலப்பாயசம்[சக்கப்ரப்தமன்] குடித்த நிறைவு நிங்ஙளுக்கு மட்டுமல்ல,
எனக்கும் தான். நன்றி சுழல் பந்து சார்.
மணியம் இதை நுலாகக் கொண்டு வரவேண்டும், வருங்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல நாடக ஆவணமாக இருக்குமே என்றார் நேற்று.
யோசிப்போம்.
கமலம்



கமலம் அம்மா,
ரம்மியமான சுகமான சாகித்யத்தை (இங்கே அது சங்கீதம் என்று பொருள் படும்) மலையாளத்திலும் அப்படித்தானோ? தந்து எங்களை வசியப் படுத்திவிட்டீர்கள். தமிழில், மலையாளத் தமிழ் என்ற புதினத்தை வாசிக்க எங்களுக்கு வாய்ப்பளித்தீர்கள். உண்மையில், கல்வெட்டு வகுப்புகளுக்குப் பின், தெரிந்த உண்மை என்ன தெரியுமா? இன்னும் பல புராணத் தமிழ் வார்த்தைகள், எழுத்து வடிவங்கள் மலையாளத்தில்தான் இன்றும் உபயோகிக்கிறார்கள் என்பது! கூத்துப் பட்டறையில் சேர உங்களது அறிமுகக் கடிதம் வேண்டும். சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையைக் கிளறிவிட்டீர்கள்!
சந்திரா












நிங்ஙள் எந்நுகூடியும் நிங்ஙள்டெ எழுத்த விடாம்பாடில்லா;
அதாண ஞான் ப்ரத்யேகமாயிட்டுப் பறயுந்நது.
மநஸிலாயோ ?

தேவ்







From: Geetha Sambasivam

Sent: Saturday, June 27, 2009 5:11:02 PM


வாழ்த்துகள் கமலம், அருமையான நினைவோட்டங்களுக்கும், அதைப் பதிந்ததுக்கும், பகிர்ந்ததுக்கும் வாழ்த்துகள். புதிய கதைத் தொடர்களிலும் வெற்றி காண வாழ்த்துகள்.

2009/6/27 v.dotthusg

ஓம்.
கைக்கருவியாகக் கேமராவும், ஒலிக்கருவியை மனத்திலும் கொண்டு அனைத்து நண்பர்களையும் கண்டு மகிழ்ந்து, அவர்களின் தோற்றம், அந்த படிமம் உள்ளத்தில் எப்படிப் பதிவை ஏற்படுத்தியது என்பதையும் ஒன்றுவிடாமல் எப்படித்தான் தொகுத்தளிக்கமுடிகிறதோ? அவர்களுடன் பேசிய விதமும் அவை உள்ளத்தில் புகுந்த விதமும், அவற்றிற்கான விளைவாகக் கூறிய பதில்களும் தணிக்கைசெய்யப்படாத நளின நடையில் அமைந்திருப்பது ஒரு அற்புதம்.
ஆசிகள் அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.



From: annamalai sugumaran
Date: 6/27/2009 7:19:34 AM




கமலம் ,

நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் ,திரைப்படம் போல் சித்தரிக்கும் தங்கள் ஆற்றல் என்னை பிரமிக்கவைக்கிறது .
எதையும் காட்ச்சியாகவே பார்த்து அவை பதிவு செய்து கொள்ளும் ஒரு அரிய முறை உங்களுக்கு கை வந்திருக்கிறது .
ஒருவித்தியாசமான அறிமுகம் .கூத்துப்பட்டறைக்கு தந்திருக்கிறீர்கள்
உடன் வாழ்ந்த நண்பர்களையும் என்றும் அழியாத பாத்திரங்களாக்கி விட்டீர்கள் .

முனைவர் கண்ணன் சொல்வது போல் உங்கள் நடை கொஞ்சும் சலங்கைதான் .
ஒரு சாஹித்யக்காரியின் படைப்பு இத்தனை விரைவில் முடிந்து விட்டது வருத்தமே ! வாழ்க !

அன்புடன்
ஏ சுகுமாரன்











Tuesday, July 21, 2009

பட்டாம்பூச்சி




அன்பிற்குரிய கமலா அவர்களுக்கு, ,
வணக்கம்.தங்கள் ஆர்வம் கலந்த இணையப் பங்களிப்பைப் பாராட்டும் வகையில்,வலைப் பதிவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு ஊக்கப்படுத்திக்கொள்ளும்
பட்டாம்பூச்சி விருதைத் தங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.
எனக்கு இவ் விருதை அளித்திருப்பவர் முனைவர் திரு குணசீலன் அவர்கள்.
http://www.gunathamizh.blogspot.com/

நான் பெற்ற பெருமையைத் தங்களுக்கு அளிக்க என் மனம் விரும்புகிறது.

தமிழ் மீது கொண்ட தீராக்காதலால் வலை எழுத்தில் ஈடுபட்டிருக்கும் தாங்கள் தரமான தமிழ்ப் படைப்புக்களை அளித்தும்,அவ்வாறானவற்றை அறிமுகம் செய்தும் தமிழுக்கு வளம் சேர்க்க வேண்டுமெனத் தங்களை வேண்டுகிறேன்.

இவ் விருதின் படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.அதை உங்கள் வலையில் போட்டுக் கொள்ளலாம். பிறகு சிறந்த வலைப் பதிவர் எனத் தாங்கள் கருதும் ஐவருக்குஅவற்றை நீங்களும் வழங்கலாம்.
அன்புடன்,

எம்.ஏ.சுசீலா,புது தில்லி
(தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை)
D II 208 KIDWAI NAGAR WEST,NEW DELHI110023
http://www.masusila.blogspot.com/





Email from MA Susila:-

From: எம்.ஏ. சுசீலா
To: kamalam.online@yahoo.com
Sent: Saturday, July 25, 2009 10:11:21 PM
Subject: எம்.ஏ. சுசீலா

எம்.ஏ. சுசீலா


விருதுப்பகிர்வு

Posted: 24 Jul 2009 10:22 AM PDT
விருதுகளும் , பரிசுகளும் நம்மை மேன்மேலும் ஊக்கப்படுத்துவதற்காக வழங்கப்படுகின்றனவேயன்றி அவை நம் செயல்பாட்டின் முடிந்த முடிவுகளல்ல.முனைவர் திரு குணசீலன் அவர்கள் எனக்கு அளித்த பட்டாம்பூச்சி விருதை - அவர் என் மீதும் என் எழுத்தின் மீதும் கொண்ட மதிப்பினால் மட்டுமே அளித்திருப்பதாக எண்ணி அதை ஏற்றுக் கொண்டபடி , தொடர்ந்த வலைப் பங்களிப்பில் முயன்று வருகிறேன். விருதை அளித்தபோது அவர் என்னிடம் கேட்டுக்